மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழில் அஞ்சலி!

0
39

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 46 ஆவது வயதில் கடந்த 30 ஆம் திகதி காலமானார்.

அன்னாரின் புகழுடல் நேற்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று இரவு யாழ் ஊடக அமையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

இவரின் இறுதி நிகழ்வுகள் நாளை13.08.2026 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். கொக்குவிலில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here