
பிரான்சு பாரிசு18 லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியில் 2025/2026 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு அகவணக்கத்தோடு ஆரம்பமானது. திருக்குறள் திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் தமிழ்மொழி பொதுத்தேர்வு சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், வழங்கி மதிப்பளிக்கப்பட்ட அதேவேளை வளர் தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்களும் விசேட சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான மதிப்பளித்தலை , சோதியா கலைக்கல்லூரியின் ஆசிரியர்கள் வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன.

நடந்துமுடிந்த பள்ளியின் ஆண்டு விழாவிற்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றியறிதலினை வெளிப்படுத்திய பள்ளியின் பிரதம நிர்வாகி, குறிப்பாக இளையோர்களின் பங்களிப்பை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். புதிய கல்வி ஆண்டில் நாம் அனைவரும் சிறப்பாகப் பயணிப்போம் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
. அனைவரின் நம்பிக்கையோடு புதிய கல்வி ஆண்டில் சில புதிய சிந்தனைகளோடு, உத்வேகத்துடன் சிறப்பாகப் பயணிப்போம் என்ற நம்பிக்கை உறுதியோடு நிகழ்வு நிறைவுகண்டது..


















