
பிரான்சில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 15.06.2026 திங்கட்கிழமை வில்தனுஸ் நகரில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் உறவுகள், நண்பர்கள் பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானோரின் அஞ்சலியோடு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, நேற்றைய நாளில் இவருடைய படுகொலைக்கு நீதி கேட்டு பேரணி ஒன்றும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் ஆதரவுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது..








