தமிழீழ தேசத்தையும் தலைவரையும் நேசித்த இயக்குநர் இமயம் சரிந்தது!

0
42

தமிழீழத் தையும் தமிழீழ தேசியத் தலைவரையும் உணர்வோடு நேசித்த “இயக்குநர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் சென்னையில் இன்று 10.06.2026 புதன்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் , திரைத்துரையினர், தமிழின உணர்வாளர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீர தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நோக்கமாக இருந்தது.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் புரட்சிகரமான வரலாற்றுப் படம். அடைகாக்கப்படுகிறது. தமிழன் என்ற இன,மொழிப் பற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் உரிமைக்காக அவர்கள் வதைபட்டார்கள். தாயை இழந்தார்கள். தாரம் தொலைத்தார்கள் தலைமுறை சொல்லும் வேர்களுமிழந்தார்கள்.இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என எல்லாம் இழந்தார்கள்.

துவேஷ வெறியர்களின் ஆதிக்க பசிக்கு இரையாகிறது தமிழினம். கற்பழிக்கப்பட்ட தாய், தங்கை, அக்கா, அண்ணி என உறவுமுறைப்பட்டியல் நீண்டது தமிழீழத்தில்.

உரிமைகளைக் கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை ஒடுங்குவதற்கு சிங்களவர்களுக்கு வெறியூட்டப்பட்டது. அவர்கள் ஆடிய கோர ஆட்டத்தின் நிணநீர் இன்னும் வடிகிறது. நரவேட்டையாடிய அந்த அரக்கர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுகிறான் ஒரு தமிழன். அந்த வீரத் தளபதியை முன் வைத்து விடுதலைப் போராட்டத்தை சான்றுகளுடன், ஒரு திரைப்படமாக காட்ட வேண்டும். தலைமுறை, தலைமுறைக்கும் அந்தத் திரைப்படம் வேதமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

இந்தப் படத்தில் வீரத் தளபதியாக யாரை நடிக்க வைக்கலாம். எந்தெந்த கேரக்டர்கள் இடம் பெற வேண்டும். எங்கே படிப்பிடிப்பு. என 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா…

1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாரதிராஜா அவர்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வழிமொழியும் வகையில் விரைவில் படமொன்றைத் தயாரிப்பேனென கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் இதயத்தில் ஈழத் தமிழர்களை தலைவனை உயிராக நேசித்தவர். இயற்கையின் மடியில் இன்று உறங்குகிறார்.

  • இயக்குநர் பாரதிராஜா –

2009 தமிழீழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலக்கட்டம்…இயக்குநர் சங்கத்தை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா..

அந்த போராட்டத்தில் பேசும்போது பாரதிராஜா அவர்கள், அவருக்கு ஒன்றிய அரசு கொடுத்த பத்மஸ்ரீ விருதை கையோடு கொண்டு வந்திருந்தார்..”இந்த விருது என் வீட்டில் மாட்டப்பட்டிருப்பது என் உடலில் இருக்கும் புண்ணைப் போல் வேதனையாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது” என்று சொல்லி…

”இந்த விருதை தூக்கி எறியலாமா உடைக்கலாமா, உங்களுக்கு என்ன உடன்பாடோ அதை செய்து கொள்ளுங்கள்” என்று கூட்டத்தின் மத்தியில் முழங்கினார். பெரும் கொந்தளிப்புடன் அந்தக் கூட்டம் “உடைக்கவேண்டும்…” என்று கத்தியது.

பிறகு இயக்குநர் அமீர் உள்ளே வந்து ”இதனை உடைக்க வேண்டாம். ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்புவோம். அதுதான் கெளரவம்..திரும்பி வந்த விருதைப் பார்த்து அவர்கள் அவமானப்படட்டும்” என்று கூறினார்.

அதன் படியே என் மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போவோரின் கைகளால் கொடுக்கபப்ட்ட அந்த விருது எனக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பினார் பாரதிராஜா.

விடைபெறுவது இயக்குநர் இமயம் பாசத்திற்குரிய பாரதிராஜா மட்டுமல்ல..திரை உலகிற்குள் தமிழுணர்வை கட்டி எழுப்பிக் கொண்டிருந்த ஒரு போராளியும் தான்.தமிழீழம் என்றும் உங்களை நினைவில் கொள்ளும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here