
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, குறிகாட்டுவான் – நயினாதீவு கடல் பகுதியில் இன்று பிரமாண்ட படகுப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (TNPF) நேரடியாகக் களமிறங்கித் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.






