
செம்மணி மனிதப் புதைகுழியின் 25ஆம் நாள் அகழ்வாராய்ச்சியில் பேரதிர்ச்சி. இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையினுடையது உள்ளடங்கலாக 10 மனித என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் எலும்புகள் பலவும் உடைந்த நிலையில், சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இன்றைய தினம் மேலும் 5 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை:
🔹 அடையாளம் காணப்பட்டவை: 360 என்புக்கூடுகள்
🔹 அகழ்ந்து எடுக்கப்பட்டவை: 351 என்புக்கூடுகள்
பேரினவாதக் கொடூரத்தின் சாட்சிகளாக மண்ணிலிருந்து வெளிவரும் இந்த எச்சங்கள், தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் மிக முக்கிய சர்வதேச ஆவணங்கள்!

எம் மக்களின் துயரங்களையும், கொடூரமான அழிவுகளையும் கண்டு இன்னமும் பேரினவாத மனநிலையில் பல்லு இலிப்பவர்களின் முகத்தில் அறையும் சாட்சிகளாக இந்த எலும்புக்கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



