செம்மணியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

0
7

இதுவரையான அகழ்வின் மூன்று கட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளதுடன், அவற்றில் 302 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வில் 6 மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட மனித எச்சக் குவியல் (Human Accumulation) ஒன்று அடையாளம் காணப்பட்டு 20ஆம் இலக்கமிடப்பட்ட மனித எச்சக் குவியலாக பதிவு செய்யப்பட்டது. இந்தக் குவியலில் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று கால்கள் மடக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மேலும், இன்றைய அகழ்வுப் பணிகளின் போது சில குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here