சிவராமின் கொலைக்கு நீதி கேட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

0
189

sivaramஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில்  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவராம் மற்றும் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்கத்திடம் நீதி கோரியும் சிவராம் படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர் சேவை தொழிற்சங்க சம்மேளனம், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WordPress database error: [User 'errimala_wo5437' has exceeded the 'max_questions' resource (current value: 1)]
SELECT FOUND_ROWS()

WordPress database error: [User 'errimala_wo5437' has exceeded the 'max_questions' resource (current value: 1)]
SELECT SQL_CALC_FOUND_ROWS wp_juyl_comments.comment_ID FROM wp_juyl_comments WHERE ( comment_approved = '1' ) AND comment_post_ID = 12226 AND comment_type NOT IN ('note') AND comment_parent = 0 ORDER BY wp_juyl_comments.comment_date_gmt ASC, wp_juyl_comments.comment_ID ASC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here