
எம் குலம் காத்த சாமிகள்! இவர்கள்!
சாமிக்கு முன் எரியும் கற்பூரம் போல
எம் இனத்தின் விடிவின் ஒளியாகி
வெளிச்சமும், வெற்றியும் பல தந்து
தடம் தெரியாமல் ஆறடிநிலம் கூட தேடாது
கரும்புகையாய் காற்றில் கலந்த தெய்வங்கள் இவர்கள்.
யூலை 5 எம் இனிப்பானவர்கள், இரும்பு போன்ற இதயம் கொண்டவர்கள்;,
எம் கரும்புச்சாமிகள் நாள் வாருங்கள் அந்த இனிப்பானவர்களுடன் சில மணித்துளிகள் எம்மை கரைத்துக்கொள்வோம்.
யூலை 5 நாள்…..


