அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நிறைவு!

0
7

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நிறைவில் இன்று வியாழக்கிழமை அமைதிப்பேரணி இடம்பெற்று திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அல்லைப்பிட்டி பங்குமக்கள் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்மறைமாவட்டக் குருக்கள் துறவிகள் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமத்தினர் அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து பதாகைகளைத் தாங்கி
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி அமைதிப் பேரணியாக அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை வந்தடைந்தனர்.

தொடர்ந்து நினைவேந்தல் சுடரேற்றப்பட்டு அடிகளாருக்கும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி வேண்டி உரைகளும் அனுபவப்பகிர்வுகளும் இடம்பெற்றதோடு நீதி சமாதான ஆணைக்குழுவினரால் ஐக்கிய நாடுகள் சபையினரை நீதியை வழங்க வலியுறுத்தும் அறிக்கை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பலி கூட்டுத்திருப்பலியாக இடம்பெற்றது.
திருப்பலியை அருட்பணி றெக்ஸ் சௌந்தரா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வுகளை அல்லைப்பிட்டிப் பங்கு மக்கள் ஒன்றிணைந்து ஒழுங்கமைத்து பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here