காங்கேசன்துறை கடற்பகுதியில் 7 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

0
181

துறைமுகத்தின் வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து டிங்கி படகில் வருகை தந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
5 கோடி ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் நிறையுடைய தங்கம் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் லதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத்திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here