பருத்தித்துறையில் தங்காபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது!

0
127

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் தங்காபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவில்நகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்து பணம் மற்றும் தங்காபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கிடைத்த முறைபாட்டிற்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 15 , 20, மற்றும் 22 வயதான மூவர் நேற்று மாலை தங்காபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here