யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த வயோதிபப் பெண்ணிடம் திருட்டு!

0
182

யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

யாழ். கச்சேரியடியை சேர்ந்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது – 59) என்ற வயோதிபப் பெண்ணிடமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

பேரூந்தில் காணப்பட்ட சன நெரிசலைப் பயன்படுத்தி, இப்பெண்ணின் பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here