கி​ளிநொச்சி ஊடகவியலாளர் தாக்குதல்; இருவர் கைது!

0
100

கி​ளிநொச்சி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு(8) இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், ஊடகவியலாளரைத் தாக்கிய நபர்கள் அவரைக் கடத்துவதற்கும் முயற்சித்துள்ளனர்.
இதன்போது பிரதேசவாசிகள் குறித்த இடத்திற்கு வருகைத் தந்ததால் சந்தேகநபர்கள் தமது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here