பாகிஸ்தானில் பேருந்து மீது குண்டு தாக்குதல் : 10 பேர் பலி!

0
121

சிறிய ரக பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் காரணமாக, சுமார் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் மாகாணத்தின் பரசினார் நகரிக்கருகாமையிலுள்ள, ஆப்கானிஸ்தான் எல்லையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர்வரையில் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் தாக்குதல் இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்துள்ள அந்நாட்டு பாதுகாப்பது படையினர் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த தாக்குதலானது ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் வெடி குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here