முல்லைத்தீவில் சிறீலங்கா விமானப்படையின் வசமுள்ள 538 ஏக்கர் காணி உட்பட வடக்கிலுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதனை இலக்காகக் கொண்டு வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து நாளை ரும் 27 ஆம் திகதி வட மாகாணம் முழுவதிலும் நடாத்த திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த ஹர்த்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
வட மாகாணம் முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.