அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக தெரியவில்லை:சி.வி. விக்னேஸ்வரன்

0
184

viki-3-680x365தமிழ் மக்களின் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வந்த இந்த நல்லிணக்க அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வு என்பது சீரும் சிறப்புமிக்கதாகவும் மகி ழ்ச்சி மிக்கதாகவும் உள்ளதாக உலகுக்குக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை. தமிழ் மக்க ளின் அவல வாழ்வு தொடர்கதையாகவே நீடிக்கின்றது.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந் துவிட்ட போதும் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலைக்குத் தீர்வு கிட்டிய பாடில்லை.

எம் தந்தை எப்போ வருவார், என் கணவர் எப்போ விடுதலையாவார், எம் பிள்ளையை நாம் எப்போது பார்ப் போம் என்று பிள்ளைகளும் மனை வியரும் பெற்றோரும் கண்ணீரும் கம்ப ளையுமாக அவர்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர்.

விடுதலையை யாசித்து எல்லோருடைய கதவுகளையும் தட்டி வருகின்றனர். பலர் எம்மை நாடி வந்து கதறி அழுவது ஆற்றொணாத மனச்சஞ்சலத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து பல்வேறு கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட வர்களையெல்லாம் பொது மன்னிப்பில் விடுதலை செய்த அரசாங்கம், இப்போது தமிழ்க் கைதிகள் என்றவுடன் வேறொரு முகம்காட்டி நிற்கின்றது.

தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறையில் இக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றாமல் குறைந்த எண்ணிக்கை யானவர்களை குறித்த கால இடை வெளிக்குள் பிணையில் விடுவிப்பதாகச் சொல்கின்றது.

அரசியல் கைதிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைச் சிதைக்கும் தந்திரோபாய மாகவே இதனைக் கருதத் தோன்றுகிறது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அரசியல் கைதிகள், மீளவும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தங் களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகப் பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையைச் செவிமடுத்த பொது அமைப்புகளும், மக்கள் பிரதி நிதிகளும் நாளை 13 ஆம் திகதி வெள் ளிக்கிழமை வடமாகாணம் தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள் ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் இந்தப் பொதுவேலை நிறுத்தத்துக்கு வடக்கு மாகாண சபை ஆதரவு வழங்கும்.

அத்துடன் எமது அமைச்சரவை இது பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நாம் ஜனாதிபதி அவர்களை விரைவில் காணும்போது இது பற்றிப் பேசுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here