சிறப்பாக இடம்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் சப்பைரதத் திருவிழா!

0
163

 –

வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பைரதத் திருவிழா இன்று 01.07.2023 சனிக்கிழமை இரவு பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இத்திருவிழாவைக் காண புலம்பெயர் நாடுகள் பலவற்றில் இருந்தும் ஈழத்தின் பல பாகங்களில் இருந்தும் அடியார்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சப்பைரத பவனியி்ல் அம்பிகை அடியவரினால் மண்ணில் அழகுற செதுக்கப்பட்ட கையிலை நாதனை ஆரத்தழுவும் நாயகி திருவுருவம் பலரையும் கவர்ந்திருந்தது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் வருடாந்த மகோற்சவம்- 2023 இன் தேர்த்திருவிழா நாளை 02.07.2023 ஞாயிற்றுக்கிழமையும், மறுநாள் திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ள நிலையில் அதன் நேர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here