வவுனியாவில் 23 வயது இளைஞன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

0
79

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (28) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளர்.

குறித்த இளைஞன் அடுப்பு பற்ற வைக்கும் போது தீ பற்றி உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here