தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் பிரான்சில் சாவடைந்தார்!

0
717


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி அமரர்.தம்பிமுத்து மணிவண்ணன் (தீவுராசன் – வாசன்) அவர்கள் பிரான்சில் உடல் நலக்குறைவால் கடந்த (20.06.2023)
செவ்வாய்க்கிழமை தனது 55 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

யாழ்..மயிலிட்டி மண்ணைப் பிறப்பிடமாகவும் பிரான்சு திரான்சிப் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டு திருப்பூர் ஒன்றியம் -பிரான்சு கிளையின் தலைவராகவும் இருந்து வந்துள்ள இவர், வாசுகியின் கணவரும், நிஷோக்,திருஷிகா ஆகிய இரு பிள்ளைகளின் தந்தையாரும் தர்ஷிகாவின் மாமனாரும் ஹேஷராவின் பேரனாருமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில்,

பார்வையிடும்நாள் நாளை ( 25.06.2023) ஞாயிற்றுக்கிழமை
நேரம்- 15.00 தொடக்கம் 16.00 வரை
இடம்-
Funérarium
95 Rue de Marcel Sembat, 93430 Villetaneuse
(இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எதிர்வரும் நாட்களிற்கான பார்வையிடும் நேரங்கள் விரைவில் அறியத்தருவோம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

(எரிமலையின் செய்திப்பிரிவு)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here