தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இலங்கை மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைசெய்யப்பட்ட 30பேரும் சென்னை பிரதி காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசகர் எஸ் பி அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.