முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய யாழ் . சகோதரர்களின் மரணம்!

0
81

முல்லைத்தீவு – மல்லாவி வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த குளத்திற்கு நீராடச்சென்ற இரண்டு சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 16 வயதுகளையுடைய சகோதரர்கள் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு – மல்லாவி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here