வவுனியாவில் சிறிலங்கா படையினர் வெறித்தனம்: இருவர் வைத்தியசாலையில்!

0
101

சிவில் உடையில் மதுபோதையில் வந்த விசேட அதிரடிப் படையினர், தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சச்சிதானந்தன் சதாநந்தன், மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிற்றம்பலம் கேதீஸ்வரன் ஆகிய இருவரே, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டை பகுதியில் தமது காணியை துப்பரவு செய்துவிட்டு வீடு திரும்பியபோது, மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினர் தங்களை தாக்கியதாகவும், ஊர்மக்கள் ஒன்றுகூடியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here