வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு மின்சார ஒப்பந்தம்!

0
78

வடக்கு மாகாணத்தில் இருந்து மின்சாரத்தை தென்னிந்தியாவுக்கு வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.

இது தொடர்பான இலங்கை- இந்தியா வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு மாதங்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே மின்சார கட்டுமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திய பின்னர் செயலாக்க ஆய்வுகள் முனனெடுக்கப்படவுள்ளன.

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, இலங்கை யில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்க தக்க மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்க முடியும் என நம்புகிறோம்.

வடக்கு மாகாணத்தில் இருந்து, எல்லை தாண்டிய மின்சார பரிமாற்ற கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here