பிரேசில் நாட்டில் வன்முறை; நாடாளு மன்றில் புகுந்த ஆர்ப்பாட்டக் காரர்!

0
112

பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த முன்னாள் அதிபர் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். பிரேசிலில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனாதிபதியாக இருந்த போல்சனேரோ சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்ற வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வருகின்றனர். பிரேசிலில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here