தனது இல்லத்தில் நினைவேந்திய சுனாமி பேபி!

0
186

சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கோரியிருந்தனர்.

இந்நிலையில் மரபணு பரிசோதனை மூலம் இக் குழந்தை ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அபிலாஷை அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டுவரும் நிலையில்  தனது 18ஆவது வயதில் சுனாமி நினைவு தினமான இன்று  உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here