திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்!

0
68

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க  சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின்  35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும்   வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள  திலீபன் அவர்களின் நினைவிடத்தில்    15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன்  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான  திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்திப் பவனியும் அதே நாளில்   பொத்துவிலில் ஆரம்பமாகியது.

 

ஐந்தாம்  நாளான இன்று (19-09-2022)   ஊர்திப் பவனியானது   வவுனியாப்பல்கலைக்கழகத்தை அண்மித்த போது  மாணவ மாணவியர் தியாகச்செம்மலுக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here