ஜெனிவா எழுச்சிப்பேரணியில் கலந்துகொண்ட தமிழ் மக்களுக்கான தொடருந்து நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது!

0
338

தமிழின அழிப்புக்கு நீதிகோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது.
தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், பிரான்சு வாழ் வெளிநாட்டு பிரமுகர்களையும் தம்முடன் அழைத்துச்சென்றிருந்தனர்.
வழமைபோன்று இம்முறையும் மக்களுக்கு வேண்டிய உணவு வசதிகள் தொடருந்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ்மொழியிலான விசேட அறிவித்தல்கள், தமிழீழ தேசிய கானங்கள் ஒலிக்க தமிழ் மக்களின் தொடருந்து வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.DSCN9955 DSCN0018 DSCN0020 DSCN0023 DSCN0025 DSCN0030 DSCN0037 DSCN0041 DSCN0042 DSCN0045 DSCN0047 DSCN9954
DSCN9962 DSCN9963 DSCN9964 DSCN9965 DSCN9967 DSCN9974 DSCN9984 DSCN9986DSCN0009 DSCN9999

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here