
யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட மகிழுந்து தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மகிழுந்தில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை இரவு 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடனே மகிழுந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

