ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சி நேரலையில் “NO WAR” சுலோக அட்டையுடன் குறுக்கிட்ட ஊடகப் பெண் கைது!

0
71

கைதான அவருக்குப் புகலிடம் தந்து
பாதுகாப்பளிக்க மக்ரோன் விருப்பம்
!

ரஷ்யாவின் தொலைக்காட்சி ஊடகவிய
லாளர் மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு
ராஜீக மட்டப் பாதுகாப்பு வழங்கும் விருப்
பத்தை பிரான்ஸின் அதிபர் மக்ரோன்
இன்று வெளியிட்டிருக்கிறார். பெண்
ஊடகவியலாளர் மெரினா ஓவ்சியானி
கோவா(Marina Ovsiannikova) ரஷ்யாவின்
பிரபல தொலைக்காட்சி செய்தி நேரலை
யின் போது அறிவிப்பாளருக்குப் பின்
புறமாகத் திடீரென நுழைந்து “போரை
நிறுத்துக” என்ற சுலோகத்தைக் காட்டி
னார். அதற்காக உடனடியாகக் கைது
செய்யப்பட்ட அவர் சிறைத் தண்டனை
யை எதிர்நோக்கியுள்ளார்.

ரஷ்யாவில் மிகப் பரந்த அளவில் பார்
வையிடப்படுகின்ற”சனல் வண்”(Channel One) அரச தொலைக் காட்சியின் செய்தி
நேரலையின் நடுவிலேயே அவர் கையில்
சுலோக அட்டையைப் பிடித்தவாறு சில
வினாடிகள் குறுக்கிட்டார். “போர் வேண்
டாம். பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்.உங் களுக்கு இங்கே பொய் சொல்லப்படுகி
றது” என்று அந்த அட்டையில் எழுதப்பட்
டிருந்தது.ரஷ்யாவின் புகழ்பெற்ற பெண் அறிவிப்பாளர் எகரெறினா அன்ட்ரே
யேவா (Ekaterina Andreyeva) வழங்கும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியின் போதே மெரினா அவருக்குப் பின் புறமாகக் குறுக்கிட்டார்.அவரது குறுக்கீடுக் காட்சி
உலகெங்கும் பல மில்லியன் பேரின்
கவனத்தை ஈர்த்தது.தொலைக்காட்சி
யின் சிரேஷ்ட ஆசிரியர் என்ற காரணத்
தினால் நிகழ்ச்சியில் அவர் குறுக்கிடு
வதைக் காவலர்களால் தடுக்க முடிய
வில்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம், அதிபர் மக்ரோன் இன்று
நாட்டின் மேற்குப் பகுதியில் Maine-et-Loire என்ற இடத்தில் உக்ரைன் அகதிகள் தங்கியுள்ள நிலையம் ஒன்றுக்குச்
சென்று அவர்களைச் சந்தித்து உரையா
டினார். அவ்வேளையிலேயே மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு ராஜீக மட்டப்
பாதுகாப்பு வழங்கி அவருக்கு புகலிடம்
அளிப்பதற்கு பிரான்ஸ் முயற்சி எடுக்கும்
என்று தெரிவித்தார். மொஸ்கோவில்
உள்ள பிரெஞ்சுத் தூதரகம் ஊடாக அதற்
கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்
ளன. இன்று நீதிமன்றம் ஒன்றில் முற்
படுத்தப்பட்ட அந்தப் பெண் ஊடகவிய
லாளருக்குப் பத்து நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

         -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                   15-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here