யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த வான் ஒன்று பாதைவிட்டு விலகி மதிலுடன் மோதியதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


