பாவமன்னிப்பின் இரகசியத்தன்மை நாட்டின் சட்டங்களை விட உயர்வா?

0
447

கத்தோலிக்கத் தலைமை ஆயரை
ஆஜராகுமாறு அமைச்சு அழைப்பு

அரசுக்கும் மதத்துக்கும் இடையே ஒரு
பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
பிரான்ஸின் ஆயர்கள் மன்றத்தின் தலைமைக் குருவை (head of the Bishops’ Conference of France) உள்துறை அமைச்
சில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்
பட்டிருக்கிறது.

பிரான்ஸின் தேவாலயங்களில் மிக
நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்ற
மத குருமார்கள் சம்பந்தப்பட்ட சிறுவர்
பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி
அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று இந்த
வாரம் வெளியாகியிருந்தது.

1950 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம்
பெற்ற சிறுவர்கள் மீதான குற்றங்கள் பற்றி ஆய்வு செய்த ஆணைக்குழு வெளி
யிட்ட அந்த அறிக்கையில் சுமார் இரண்டு
லட்சத்து 16 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பதிவாகி உள்ளன. தொடுகை முதல் வல்லுறவு வரை சிறுவர்
கள் மீது புரியப்பட்ட பல்வேறு குற்றங்கள் அடங்கிய அந்த அறிக்கை கத்தோலிக்க சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் கத்தோலிக்க ஆயர் மன்றத்தின்
தலைவர் Eric de Moulins-Beaufort அந்த
அறிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்
றுக்குக் கருத்து வெளியிடுகையில்,
‘பாவமன்னிப்பு’ அல்லது’ஒப்புதல் வாக்கு
மூலம்’ எனப்படுகின்ற குற்றத்தை ஒப்புக்
கொள்ளும் மதச் சடங்கில் பேணப்படும்
‘ரகசியம்’ நாட்டின் சட்டங்களை விட மேலா
னது என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டி
ருந்தார்.

பாவிகள் தங்கள் பாவங்களை பாதிரியா
ரிடம் ஒப்புக் கொண்டு கடவுளிடம் மன்னி
ப்புக் கோருகின்ற ஒரு சடங்கே ஒப்புதல்
வாக்கு மூலம் அல்லது பாவ மன்னிப்பு
எனப்படுகிறது. அது ஒரு திரைக்குப் பின்
னால் செய்யப்படுகிறது.அதன்போது
பாவம் செய்தவரது குரலை மட்டுமே மத
குருவானவர் செவிமடுப்பார். அதில் பேணப்படுகின்ற மிக உயர்ந்த ரகசியத்
தன்மையையே’நாட்டின் சட்டங்களை விட
மேலானது’ என்று ஆயர்கள் அமைப்பின்
தலைமைக் குரு குறிப்பிட்டிருந்தார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட
வர்களும் அவ்வாறு பாவ மன்னிப்புக்
கோரியிருக்கலாம். அது பற்றிய ரகசியத்
தன்மையை வெளிப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்தே ஆயர் தனது
கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று
நம்பப்படுகிறது.

அவரது அந்தக் கருத்துக் குறித்து விளக்
கம் கேட்பதற்காகவே-அரசுத் தலைவர்
மக்ரோனின் பணிப்பின் பேரில்- உள்
துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா
ஆயரை அமைச்சுக்கு அழைத்திருக்கி
றார்.நாட்டின் குடியரசுச் சட்டங்களை விட
உயர்வானவை என்று எதுவும் இல்லை”
என அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால்
கூறியிருக்கிறார்.

அமைச்சின் ஆணையை ஏற்றுக் கொண்
டுள்ள ஆயர், எதிர்வரும் செவ்வாய்க்
கிழமை உள்துறை அமைச்சரைச் சந்திக்
கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்
ளது.

பிரெஞ்சுச் சட்டங்களின் படி சிறுவர் குற்றங்களை அறிந்திருந்த ஒருவர்
அதுபற்றி அரச அதிகாரிகளுக்குத் தெரி
யப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். அவ்
வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அபரா
தம் மற்றும் சிறைத் தண்டனையை எதிர்
கொள்ள நேரிடலாம் .

சிறுவர் குற்றங்கள் புரிந்தோர் பாவ மன்
னிப்புக் கோருவதன் மூலமாக நாட்டின்
சட்டங்களில் இருந்து தப்பிவிட முடியுமா
என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்ற இந்த விவகாரம் ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது.

          -பாரிஸிலிருந்து குமாரதாஸன்
                                                    08-10-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here