மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
560

bodyமன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது.கரை ஒதுங்கியுள்ள சடலத்தில் தலை, கை கால் என்பன துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் நேற்று இரவு 9 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலம் தற்பொழுது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளதால் அது ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை. சடலம் தொடர்பாக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here