நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு!

0
551

நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில்
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த
ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில்
Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட
தொழிற்சாலை ஒன்றில் (bulb company)
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்
கின்றன.

யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த
இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில்
நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்
திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு
பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவரா
வார்.

பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்
பட்ட மண்ணில் சிக்குண்டு சிறிதுநேரம்
கவனிப்பாரின்றிக் கிடந்த அவர் பின்னர் சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்
கப்பட்டுள்ளார்.அவசரமாக அம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர் வரவழைக்கப்பட்டு மருத்துவர் ஒருவரது கண்காணிப்பில்
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்
பட்டார்.

நீண்ட நேரம் மண்ணில் புதையுண்டு கிடந்ததால் மூச்சிழந்து கோமா மயக்க நிலையை அடைந்திருந்த அவர் சில நாட்களின் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று நெதர்லாந்து தமிழ் செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. காலை வேளை தொழிலுக்குச் சென்ற அவர் எவ்வாறான சூழ்நிலையில் மண் நிரப்பும் கொள்கலனுக்குள் சிக்குண்டார் என்பது தெரியவரவில்லை.

(படங்கள் :தொழிற்சாலையில் விபத்து நடந்த பகுதி.மீட்புப் பணிக்கு வந்த அம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர்.)

குமாரதாஸன். பாரிஸ்.
10-09-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here