பிரான்ஸ்:அணிவகுப்பை சுகாதார பத்திரத்துடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி!

0
220

பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின
அணிவகுப்புகள் புதனன்று நடைபெற வுள்ளன. avenue des Champs-Elysées தெரு
வில் இடம்பெறுகின்ற படைகளது அணி
வகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவ
வதற்கு இந்த முறை பொதுமக்கள்
அனுமதிக்கப்படவுள்ளனர். பார்வை யாளர்களுக்கு மாஸ்க், சுகாதாரப் பாஸ்
(pass sanitaire) என்பன கட்டாயம் ஆகும்
என்று பாரிஸ் பொலீஸ் தலைமையகம்
அறிவித்துள்ளது.

11 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டமைக்கான சுகாதாரப் பாஸ், தொற்று இல்லை என்பதை நிரூபிக்கின்ற சோதனை அறிக்கை, தொற்றில் இருந்து மீண்டமைக்கான சான்றிதழ் இவை மூன்றில் ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாகும். (vaccination complète, test négatif, test prouvant un rétablissement au Covid-19)

வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பு
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே
நடைபெற்றது. அழைக்கப்பட்ட பார்வை
யாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டி
ருந்தனர். இந்த முறை பார்வையாளர்கள்
சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் கலந்து
கொள்ள முடியும்.

4ஆயிரத்து 300 படைவீரர்கள், 71 விமானங்கள், 25 ஹெலிக்கொப்ரர்கள்,
221 வாகனங்கள், 200 குதிரைகள் இந்த
முறை அணிவகுப்பில் உள்ளடங்கி இருக்கும்.”Griffon armored”எனப்படும் புதிய தலைமுறை துருப்புக் காவி கவச வாகனங்கள், ஆபிரிக்காவின் சாஹல்
படைநடவடிக்கையில் பங்குபற்றிய புதிய
CaRaPACE armored tanker ஆகியன முதல்
முறையாக இம்முறை கண்காட்சியில்
இடம்பெறவுள்ளன.சுமார் இரண்டு மணி
நேரம் நீடிக்கின்ற படைகளது அணிவகுப்
புக்களை அதிபர் மக்ரோன் ஏற்றுக் கொள்
வார்.

ஆபிரிக்காவில் தகுபாவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற ஐரோப்பிய
விசேட படைப்பிரிவு (European special forces – Takuba) இந்த முறை நிகழ்வில்
பிரதான பங்கு வகிக்கவுள்ளது.

சுதந்திர நாளை ஒட்டி அன்றிரவு ஈபிள் கோபுரம் பகுதியில் இடம்பெறுகின்ற
கண்கவர் வாணவேடிக்கை le feu d’artifice
நிகழ்வினையும் பொதுமக்கள் மாஸ்க்
அணிந்த நிலையில் பார்வையிட முடியும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 35 நிமிடங்
கள் நீடிக்கின்ற அந்த வாண வேடிக்கை
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளி
பரப்பாகும்.அதேசமயம் டெல்ரா உட்பட
புதிய வைரஸ் தொற்று அபாயம் காரண
மாக நாட்டின் பல நகரங்களில் வாண
வேடிக்கைக் கொண்டாட்டங்கள் ரத்துச்
செய்யப்பட்டுள்ளன.

தீயணைப்பு வீரர்களால் பாரிஸின் 92, 93 94 மாவட்டங்களில் காட்சிப்படுத்தப் படுகின்ற சாகச தீயணைப்பு நிகழ்வுகள்

(bal des pompiers) சுகாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டும் நடைபெற மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
12-07-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here