தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை விடுத்துள்ள அறிவித்தல்!

0
1037


தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை புலத்தில் வாழும் மாணவர்களின் தமிழ்மொழிக் கற்கை நெறியை மேம்படுத்தும் நோக்குடன் தனது உயரிய பணியைச் செவ்வனவே ஆற்றி வருகிறது. அதற்கான வளர்தமிழ் நூல்களையும் வளர்தமிழ் நூல்களைப் பயிலும் மாணவர்களுக்காக வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரைக்கான தமிழ்மொழிப் பொதுத் தேர்வையும் நடாத்தி வருகிறது. தேர்வுக்கான தேர்வுத்தாள்களையும் புலன்மொழி வளத்தேர்வுக்கான கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய திறன்களை வளர்ப்பதற்கான தேர்வுத்தாள்களையும் அணியமாக்கி அனைத்துக் கல்விக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கின்றது. ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இத்தேர்வானது கடந்த ஆண்டு (உலகத்தையே உலுக்கும்) நுண்ணுயிரத்; தாக்கத்தினால் திட்டமிட்டபடி தமிழ்மொழிப் பொதுத் தேர்வு எல்லா நாடுகளிலும் நடைபெறாவிட்டாலும் நெதர்லாந்து நாட்டிலும் நியூசிலாந்து நாட்டிலும் 1-12 வரைக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வும் யேர்மனி, பிரித்தானியா டென்மார்க் ஆகிய நாடுகளில் வளர்தமிழ் 12 இற்குரிய தேர்வுகள் மட்டும் சிறப்பாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது.
அது போலவே 2021ஆம் ஆண்டும் நுண்ணுயிரத் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி ( நலன்கருதி) தமிழ்மொழிப்; பொதுத் தேர்வு எழுதுதல் தேர்வு மட்டும் 17.07. 2021 அன்று நடைபெறும் என்பதை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முடிவு செய்து பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றது. தேர்வுக்கு அணியமாகும் மாணவர்கள் வழிகாட்டலாக தேர்வுத்தாள்கள் பெற கீழ் உள்ள
முகநூலைப் பார்த்துப் பயனடையுங்கள்
Face book: TAMIL EDUCATION DEVELOPMENT COUNCIL
நன்றி

  தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here