யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறப்பு!

0
396

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து இடித்தழிக்கப்பட்டு, பின்னர் போராட்டத்தை தொடர்ந்து மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (23) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்தழிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11 அதிகாலை அடிக்கல் நாட்டியமை தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here