மட்டக்களப்பில் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
498

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று (21) புதன்கிழமை இடம்பெற்றது.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான பின்னர் முதன்முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இடம்பெற்ற இந்த விசேட வழிபாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

சீயோன் தேவாலாயத்தின் பிரதம போதகர் பாஸ்டர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 70க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி: உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here