சிகிச்சை பலனளிக்காத நிலையில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !

0
1031

neruppuகுடும்பப் பிரச்­சினை கார­ண­மாக தன்­னைத்­தானே தீயிட்டு தற்­கொலை முயற்­சி­யி­லீ­டு­பட்ட பெண் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சிகிச்சை பல­ன­ளிக்­காது நேற்­றைய தினம் அதி­காலை 2 மணிக்கு உயி­ரி­ழந்­துள்ளார்.
யாழ்.பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான பீட 3ஆம் ஆண்டு மாண­வி­யான மரினா அனா எப்­சிவா (வயது 23) என்ற மாண­வியே பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­வ­ராவார்.
இச் சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, திரு­நெல்­வேலி பால் பண்ணை வீதியில் பல்­க­லைக்­கற்கை நெறிக்­காகத் தற்­கா­லி­க­மாகத் தங்­கி­யி­ருந்த முல்­லைத்­தீவைச் சேர்ந்த குறித்த மாணவி கடந்த 6ஆம் திகதி தன்­னைத்­தானே தீயிட்டு தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்ளார். இதன்­போது பலத்த எரி­கா­யங்­க­ளுடன் அய­ல­வர்­களின் உத­வி­யுடன் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.
தொடர்ந்து அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­தாக யாழ். போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here