குடும்பப் பிரச்சினை காரணமாக தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை முயற்சியிலீடுபட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது நேற்றைய தினம் அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட 3ஆம் ஆண்டு மாணவியான மரினா அனா எப்சிவா (வயது 23) என்ற மாணவியே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருநெல்வேலி பால் பண்ணை வீதியில் பல்கலைக்கற்கை நெறிக்காகத் தற்காலிகமாகத் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த மாணவி கடந்த 6ஆம் திகதி தன்னைத்தானே தீயிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது பலத்த எரிகாயங்களுடன் அயலவர்களின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக யாழ். போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.