இரணைதீவு கடற்பரப்பில் மீனவர்கள் மீது சிறிலங்கா படை கொலைவெறித் தாக்குதல்!

0
139

மன்னார் – பள்ளிமுனையில் இருந்து நேற்று (13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நள்ளிரவு நேரம் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிமுனை கடற்கரையில் உள்ள கடற்படையினரின் சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொண்ட பின்னா் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது நள்ளிரவு 12 மணியளவில் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டதோடு தேவையற்ற காரணத்தை கூறி, படகில் இருந்த 4 மீனவர்களை 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் கடற்படையினர் அவா்களைத் தாக்கியதோடு, மீனவர்களின் தொலைபேசி மற்றும் டோச் லைட் போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பள்ளிமுனை கடற்படை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here