நேற்று இருவேறு பேருந்து விபத்துக்களில் இருவர் பலி!

0
211

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மதுபான நிலையத்திற்கு சென்று விட்டு, வீதியை கடந்த இளைஞன் ஒருவர் சொகுசு பேருந்து மோதி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) பின்னிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

இதில் கிளிநொச்சி – அக்கராயன்குளத்தை சேர்ந்த கெவின் கிஷோகுமார் (வயது 31) என்பவரே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ‘என்எப் 5121’ என இலக்கமுடைய சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு இளைஞன் மீது மோதியுள்ளது.

இதேவேளை,

நுவரெலியா – ஹட்டன் நகர பிரதான வீதியில் பேருந்தின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் நேற்று (12) மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.

விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்தில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் நோர்வூட்டை சேர்ந்த குபேரன் கருணாகரன் (28-வயது) எனும் இளம் குடும்பஸ்தரே பலியானார். அத்துடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here