கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

0
573

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கியதில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.30 மணி அளவில் தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில், சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here