சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு திட்டமிடப்பட்ட வகையில் தொடரும் நிலையில், மீண்டும் மீண்டும் தமிழினம் சர்வதேசத்தினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் இக்கவனயீர்ப்பு போராட்டமானது தற்போது நிலவும் கொரோனாப் பேரிடர் சூழலுக்கு மத்தியிலும் ஆயிரம் பேர்வரை 01.03.2021; திங்கள் பிற்பகல் 14:30 மணி
UNO Geneva, ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (இத் திடலிற்குள் மாத்திரம்) கலந்து கொள்வதற்கான காவற்துறையின் அனுமதி பெறப்பட்டு, சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி நடைபெறவுள்ளது.
அனைவரையும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.