திருமலையில் வாள்களுடன் வந்த கும்பல் நகைக் கடையில் கொள்ளை!

0
138

திருகோணமலை என்.சீ வீதியில் நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நகைக்கடையில் கொள்ளையிடும் காட்சி அடங்கிய சிசிடிவி காணொளியை பொலிசார் பெற்று விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here