வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!

0
199

மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க வடக்கில் வவுனியா மற்றும் மன்னார் நீதிவான் நீதிமன்றங்கள் தடை விதித்து இன்று (19) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளன.

சிறிலங்கா காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் குறைவாக காணப்படும் வடக்கிலும் கிழக்கிலும் அரச நிகழ்வுகள், அமைச்சர்களின் நிகழ்வுகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழர்களின் உணர்வு, உரிமை சார்ந்த நிகழ்வுகள் கொரோனா தனிமை சட்டத்தை காண்பித்து அடக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here