“மாமனிதர்” நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல்!

0
261

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் “மாமனிதர்” நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10.11.2020) செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது.

மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here