மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி நாளை ஆரம்பம்!

0
629

பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல், எதிர்வரும் 21 ,22 ஆம் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தமிழ்ச்சோலை மாணவர்கள் மட்டத்தில் நடைபெற்ற இத்திறனறிதல் மாவீரர் நாளையையொட்டி பொதுமக்களுக்காக விரிவாக்கப்படுவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே செய்யக்கூடிய இத்திறனறிதலின் முடிவில் சான்றிதழ்கள் மின்னஞ்சலுக்கு உடனடியாகக் கிடைக்கப்பெறும் வகையிலான புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தமிழ்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஊடகங்களில் வெளியிடப்படும்.
கறுப்பு யூலை, தியாக தீபம் திலீபன்,மற்றும் மாவீரர் நாள் ஆகிய நினைவு நாட்களையொட்டி இத்திறனறிதல் பொதுமக்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறவிருக்கிறது. மாவீரர் நாளையொட்டி நடத்தப்படும் இத்திறனறிதல் தமிழீழப் போராட்டம் தொடர்பான பரந்துபட்ட கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தமிழ்ச்சோலை தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
‘’வரலாற்றைப் படி ! வரலாற்றைப் படை’’ எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய இளையோரிடத்தே எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றுப் புரிதல் இன்றியமையாதது. புதிய தொழில்நுட்பத்தூடு வரலாற்றை இளையோரிடத்தே கொண்டு செல்வதே இத்திறனறிதலின் நோக்கம் எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவுத்துள்ளது.

“வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நாளைமறுதினம் 21 ஆம் நாள் மறுதினம் 22 ஆம் நாட்களில் நடாத்தப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

  1. திறனறிதலில் அகவை வேறுபாடின்றி யாரும் பங்குகொள்ள முடியும்.
  2. ஒருவர் ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
  3. குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.
  4. நேரம் கடந்து முடிக்கப்படுமிடத்து சான்றிதழ்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற மாட்டாது.
  5. தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களை குறிப்பிட வேண்டும்.
  6. தமது பெயர்கள் பிழையாக குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கப்பெறும் என்பதோடு மாற்றம் செய்யமுடியாது என்பதை கவனத்திற் கொள்க.
  7. Icloud மின்னஞ்சல் முகவரிகள் தவிர்க்கவும்.
  8. கணினி, வரைபட்டிகை (tablette).திறன்பேசிகளில்(Smartphone) மட்டுமே திறனறிதலைச் செய்ய வேண்டும்.

வரலாற்றுத் திறனறிவைப் பெற்றுக் கொள்வோம்* நவம்பர் 21,22*
————————————————-
காலச்சூழல்களே மாந்தர்களின் இயங்குநிலையையும் இருப்பையும் தீர்மானிக்கின்றது.
காலச்சூழல்களுக்கேற்ப எம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
உலகின் அரசியல், பொருண்மிய, வணிக, அறிவியல் தொழில்நுட்பத் தரவுகளும் எமது வாழ்வியலில் உள்ளடங்கியிருக்கின்றது.

உலகளாவிய தமிழர்களின் வரலாறு தொடரவேண்டுமானால் எமது கடந்தகால வரலாற்றினையும் கற்க வேண்டிய தேவையுள்ளது. இதற்காகவே வரலாற்றுத் திறனறிதலை இணையவழியூடாக நடாத்துகின்றோம்.
எமது காலத்தின் தேவையையும் புலம்பெயர் குமுகத்தின் விருப்பையும் ஒருங்கிணைப்பதற்காகவே, இத்திறனறிதல் அமைகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொண்டு , ஆர்வலர்கள் எமக்குக் கைகொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here