ஆயுதம் தேடல் என்ற போர்வையில் தங்கம் தேடும் சிறீலங்கா அரசு !

0
339

இதுவரை காலமும் விடுதலைப் புலிகளால் புதைத்துவைத்த தங்கத்தை தேடிதிரிந்த சிறீலங்கா படையினர் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைத் தேடுவதாக நில அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தவகையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி வவுனியா காவல்துறையினர் அகழ்வு ஒன்றை நடத்தினர். இதன்போது அலவாங்கு ஒன்றை மட்டுமே அவர்கள் மீட்டனர்.

வவுனியா, விளக்குவைத்தகுளம் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத்திருந்தனர் என்று மட்டக்களப்பில் பெற்ற தகவலின் அடிப்படையில், வவுனியா நீதிமன்றின் அனுமதியைப் பெற்று பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் கனரக வாகங்களின் உதவியுடன் 10 அடிக்கும் மேலான ஆழம் வரை தோண்டப்பட்டது. இதன்போது அலவாங்கு ஒன்று மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது. அத்துடன் மதுபான வெற்று ரின்களும் அங்கு காணப்பட்டன.இதையடுத்து தோண்டப்பட்ட கிடங்கு  மீளவும் மூடப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here