

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய் யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினை வேந்தல் நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமதியம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்யபெற்றது.
இதன்போது நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு அவரது சகோதரன்
சுடரேற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த் தீபன் மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன் மற்றும்
ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
போர் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து , துணிவாக ஊடகப் பணியாற்றியவரே மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, ராவய மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவற்றில் பணியாற்றியிருந்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொண்டு படுகொலை செய்தனர். அதன்போது அவர் எழுதிக் கொண்டு இருந்த கட்டுரை மீது இரத்தம் தோய்ந்திருந்தது .
ஆயுததாரிகள் நிமலராஜனைப் படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது
கைக்குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.
குறித்த படுகொலை சம்பவம் நடை பெற்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு


நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (19) நடைபெற்றது.
வவுனியா


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 20 ஆவது நினைவுதினம், நேற்று (திங்கட்கிழமை) வவுனியாவில் நினைவுகூரப்பட்டது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.
சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில், வவுனியா தமிழ்ஊடகவியலாáர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நிமலராஜனின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி சுடரை சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ. மாணிக்கவாசகம் ஏற்றி, மலர் மாலையும் அணிவித்தார்.
இதனையடுத்து ஊடகவியலாáர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியமையுடன் அஞ்சலி உரையை பொ.மாணிக்கவாசகம் நிகழ்த்தியிருந்தமையுடன் நன்றியு ரையை ஊடகவியலாáர் ந.கபிலநாத் வழங்கினார்.