

தமிழர்கள் அதிகம் வாழும் நீர்கொழும்பில் வர்த் தகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டதையடுத்து அப்பகுதியில் உள்ள 200 கடைகள் மூடப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள, மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மாநகர சபையின் பொது சுககாதார பிரிவினர் மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் அமைந்துள்ள சகல கடைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் அப்பகுதியிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.அத்துடன் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகியோருக்கே கொரோனா தொற்றுக்கு இலக்கானமை கண்டறியப்பட்டது. இவர்கள் திவுலபிட்டியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சுப்பர் மார்க்கட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்களும் இன்று திங்கட் கிழமை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரவித்தனர்.